Tuesday, September 18, 2007

வலி!

பொதுவாக இருவரும் பேசிக்கொள்வதில்லை
எதையோ தேடும் என் கண் முன்னே நீ -
காத்திருந்ததை போல
உள் மனசுக்குள் ஓர் நினைவு -
நீ என்னை பார்த்துக்கொண்டே இருப்பதாக

வார்த்தைகள் ஏதுமின்றி
உன்னை தொடுவது மட்டும் எனக்கு பிடிக்கும்
பரிச்சயமானதுதான் உன் பட்டு மேனி -
இருந்தாலும்
ஒவ்வொரு தீண்டலும் புதிதாய் தோன்றும்

இன்று உன்னை காணவில்லை என்கிறபோது
சின்னதாய் ஓர் வலி - மனதில்

எங்கே சென்றாய்?

-- காணாமல் போன என் டெடி பியருக்காக

No comments: