மண்டையை பிளக்கும் வெய்யில்
கவலையற்ற நடைபாதை மக்கள்
மாநகர வாகன நெரிசல்
கரும்புகை கக்கும் கனரக ஊர்திகள்
மலைபிரதேசமெனும் சாலை
நொடிக்கொரு திருப்பம்
அழுக்கேரிய மனதில் வெள்ளாடை
ஆங்காங்கே அழுவதற்கு சில்லரை கொஞ்சம்
உள்ளாடை காட்டும் நாகரீக கூட்டம்
உடனிருக்க கூலிகேட்கும் மற்றொரு கூட்டம்
தாகம் தீர்க்க உயிரைக்குடிக்கும்
தண்ணீர் வண்டிகள்
கடன் கேட்டு இல்லையென்றால்
தூற்றிப்பேசும் நண்பர்கள்
கஷ்டம் என்றால் ஓடி மறையும்
சுற்றம்
கண்ணயர்கையில்
கதவுடைக்கும் களவாடிகள்
தெருமுனை ரேஷன் கடை
எறும்புகளாய் சிலர்
சாக்கடையோர குடிசைகள்
சலனமில்லா சிறுவர்களின் விளையாட்டு
எப்போதாவது நடக்கும்
வைபவங்கள்
.......இன்னும்.......
இன்னும் எத்தனை எத்தனையோ...
வாழ்க்கையை வளைத்து கேள்வியாக்கும்
அப்போதும்...
கண்ணே உன் ஞாபகமடி...
காதல்கொண்ட என் நெஞ்சமெங்கும்!
தோற்றமும் மறைவும் தொடர்பற்று
வாழ்கை...
வீசும் காற்றில் ஓர் வெற்று காகிதமாய்
விரக்தியில் விழி பிதுங்கும்
இறப்பது எளிதெனப்படும்
இருப்பினும்...
நமக்காக அன்றியேனும்
நம் காதலுக்காக
உயிர் வாழ்வேன்!
Thursday, September 13, 2007
உன் ஞாபகம்
Posted by J at 2:05 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment